Total Pageviews

Thursday, July 21, 2011

பசித்துப் புசிப்பவன் நீண்ட நாள் உயிர் வாழ்வான்...

நாம் எந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் பசியாறும். நன்கு வயிறு பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசித்துப் புசிப்பவன் நீண்ட நாள் உயிர் வாழ்வான்...

திருக்குறள் - 56


திருக்குறள் - 56
தற்காத்துக் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்: கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

Tuesday, July 12, 2011

திருக்குறள் - 55


திருக்குறள் - 55
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பொருள்: கணவன் வாக்கினை கடவுள் வாக்கை விட மேலாக கருதும் பத்தினி தெய்வங்கள் பெய்யென்றால் பெய்யும் மழை.

Thursday, July 7, 2011

திருக்குறள் - 54

திருக்குறள் - 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
பொருள்: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதை விடப் பெருமைக்குரியது வேறு யாது?

Wednesday, July 6, 2011

திருக்குறள் - 53


திருக்குறள் - 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
பொருள்: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

Tuesday, July 5, 2011

திருக்குறள் - 52


திருக்குறள் - 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பொருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கு தனி சிறப்பு கிடையாது.

Monday, July 4, 2011

திருக்குறள் - 51


திருக்குறள் - 51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்க்கைக்குப் பெருந்துணையாவாள்.