Total Pageviews

Sunday, July 29, 2012

January 27, 2002 - கற்றதும் பெற்றதும் - - சுஜாதா... தமிழ் சினிமா படங்கள் எடுப்பதில் எனக்குக் கிடைத்த அனுபவங்களின் சாரம்...


January 27, 2002 - கற்றதும் பெற்றதும் -  - சுஜாதா...  தமிழ் சினிமா படங்கள் எடுப்பதில் எனக்குக் கிடைத்த அனுபவங்களின் சாரம்...
---------------------------------------------------------------------------




மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத் தின் டைரக்டராக ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் பணி புரிந்ததில் ஐந்து படங்கள் எடுப்பதில் பங்கு கொண்ட எனக்குக் கிடைத்த அனுபவங்களின் சாரம் இந்த இருபது விஷயங்கள் தமிழ் சினிமா உலகுக்குப் பயன்படும் என்று நம்புகிறேன்.

1. குறித்த நேரத்தில் பட்ஜெட் போட்டு அதற்குள் முடிக்கப்படும் படங்கள் தோல்வியடைவதில்லை பெரும்பாலும்.

2. ‘ஸ்டார் சிஸ்டம்’ இருந்தும் கறுப்புப் பணத்தின் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஆனால், முழுவதும் குறைக்க முடியாது.

3. ஒரு நல்ல நடிகர் இருந்தால் படம் பூஜையின்போதே வியாபாரமாகிறது. அதாவது உத்தரவாதங்கள் தரப்படுகின்றன. ஆனால், பாதி பட்ஜெட் ஸ்டாருக்குப் போய்விடுகிறது.

4. சில வங்கிகளும் வென்ச்சர் நிறுவனங்களும் சினிமாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த உதவி சுலபமாகக் கிடைக்கும்.

5. பட விநியோகம் படம் எடுப்பதைவிட பத்திரமானது. அதுபோல் டி.வி. சீரியலிலும் எடுப்பதைவிட விற்பது ரிஸ்க் குறைவானது.

6. டி.ஆர்.பி. ரேட்டிங் என்பது உட்டாலக்கடி.

7. நல்ல டைரக்டர், நடிகர்கள், இசையமைப்பாளர் இருந்தாலும் நல்ல கதையிருந்தால்தான் படம் வெற்றி பெறுகிறது. சிக்கல் என்னவென்றால், நல்ல கதை எது என்பதை லேசில் சொல்ல முடிவதில்லை. சில சமயம் அற்ப காரணங்களுக்காக நன்றாக எடுக்கப்பட்ட படம் நிராகரிக்கப்படுகிறது. சில சமயம் ஒரு பாட்டுக்காகப் படம் ஓடுகிறது.

8. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பலவீனம் கதையும் முப்பத்தாறு சதவிகித வட்டியும்தான்.

9. தொலைக்காட்சியை சினிமாவின் சோகைக்குக் காரணம் கூறுவதில் அர்த்தமில்லை.

10. அமெரிக்காவில் இருப்பது போல் விடுமுறைகளில் அதிக ரேட்டும் சாதாரண தினங்களில் கம்மி ரேட்டும் வசூலிக்க தியேட்டர்களுக்கு அனுமதித்தால் அரசுக்கு வருமானம் அதிகமாகும்.

11. இப்படிச் செய்தால்தான் ‘டாப்டென் மூவீஸ்’ பற்றிய உண்மை வெளிப்படும். இல்லையேல் தியேட்டரை விட்டு எப்போதோ ஓடிப்போன படங்களெல்லாம் டாப் டென் பட்டியலில் வெத்தாக வீற்றிருக்கும். காரணம் அவர்கள் அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பார்கள்.

12. முதல் வருடத்துக்கு டிரெய்லர் மட்டும்தான் காட்ட வேண்டும். ‘பீட்டா’வைக் கொடுத்து விடுவதால் கொஞ்சம் கொஞ்சமாக முழு சினிமாவையே தவணை முறையில் காட்டிவிடுகிறார்கள். இது சினிமாவை மிகவும் பாதிக்கிறது. இதை அறியாமல் சாட்டிலைட் உரிமைக்காகப் படத்தை தாரை வார்த்துவிடுகிறார்கள்.

13. ஸ்லைடிங் ரேட்ஸ் சிஸ்டம் வந்தால் ஒரு படத்தின் தினப்படி வசூலை துல்லியமாகக் கணிக்க முடியும். ஹாலிவுட் படங்கள் போல இதற்கென்று யாராவது பாரபட்சமற்ற வலைமனை துவங்கலாம்.

14. சினிமாவில் திறமையுள்ள கலைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு சம்பளம் போதாது. தயாரிப்பாளர்களுக்கு மா&னஜ் மெண்ட் பயிற்சி போதாது. ஒவ்வொரு தயாரிப்பு கம்பெனியிலும் எம்.பி.ஏ. படித்த ஆசாமி ஒருத்தர் அவசியம் வேண்டும்.

15. படம் எடுப்பது சுலபம் போல இருக்கும் மிக மிகக் கடினமான வேலை.

16. ஒரு படம் தோற்பதற்கு எனக்குத் தெரிந்தவரை 132 காரணங்கள் உள்ளன. ஜெயிக்க நான்கே காரணம்தான்.

17. ஒரு டைரக்டருக்கு ஒரு நல்ல படம் செய்த பிறகு அடுத்து ஒரு மோசமான படம் வரை திரையுலகு மன்னிக்கிறது. அதன்பின் அவர் மறுபடி க்யூவில் கடைசியிலிருந்து வரவேண்டும்.

18. திரைப்படக் கல்லூரிகளில் தரும் பயிற்சி போதாது. குறிப்பாக திரைக் கதை அமைப்பதில் பயிற்சி. திரைப்படத் தயாரிப்பில் தனிப்பட்ட டிப்ளமா படிப்பு துவக்கவேண்டும்.

19. டிஜிட்டல் சினிமா டி.வி. மூவிஸ் மூலம் இருபது, முப்பது லட்சத்துக்குள் படம் எடுக்க முடியும்.

20. இந்த ஆண்டு இந்தத் துறை ஒற்றுமை காட்டவில்லை என்றால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு ஸ்னோபோலிங், கோகார்ட், இன்டர்நெட் கபே, மசாஜ் பார்லர் மற்றும் கல்யாண மண்டபங்களாக மாறும் அபாயம் உள்ளது. நெருப்புக் கோழியை மண்ணிலிருந்து தலையை எடுக்க வைக்கவேண்டும்.

Friday, July 27, 2012

July 20, 2003 கற்றதும் பெற்றதும் - லஞ்சம் - 'கையூட்டு' - சுஜாதா...








பல முறை படிந்திருந்தாலும் மீண்டும் படிக்க தூண்டுவது சுஜாதாவின் நடை விஷயஞானம்... உண்மையான கட்டுரை....

லஞ்சம் என்பதற்கு தூய தமிழ்ச் சொல்லாக 'கையூட்டு' என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை இந்தச் சொல் 1910-ல் கோபிநாத் ராவின் 'சோழ வம்ச சரித்திரச் சுருக்கம்' என்ற புத்தகத்தில் முதலில் வந்துள்ளது. லஞ்சம், சோழர் காலத்திலிருந்து இருந்திருக்கிறது என்பதற்கு மறைமுகமாக கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதை நீலகண்ட சாஸ்திரியின் 'The Cholas'ல் காணமுடிகிறது. சோழர்காலத்தில் அரச குற்றங்கள் செய்தவர்களை ஒரு மரச்சட்டத்தில் கட்டிவைத்து எழுபதிலிருந்து நூறு பிரம்படி கொடுத்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. சில சமயங்களில் தலையையும் கொய்திருக்கிறார்கள்... அல்லது யானையால் மிதித்திருக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் தண்டனை அவ்வளவு தீவிரமானதாக இல்லை. கோயிலுக்கு ஒரு வருஷத்துக்கு தினம் ஒரு விளக்கு ஏற்றினால் போதும் என்று கொலைக்குற்றங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக் கின்றன. இதன் பின்னணியில் கையூட்டின் கை இருப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் 'இவர்கள்‘ விளக்கேற்றுவதில்லை. சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய், அடுத்த திங்கட்கிழமை ஜாமீனில் வெற்றி வேந்தர்கள் போல திரும்பி வந்து, போஸ்டர் ஒட்டி விழாக் கொண்டாடுகிறார்கள். கொஞ்சம் ஆராய்ந்தால் லஞ்சம் சங்க காலத்திலிருந்து இருக் கிறதை யூகிக்கலாம்.

நவீன இந்தியாவில் லஞ்சம் பிரிட்டிஷ்காரர்கள் துவக்கி வைத்தது. திவான் பஹதூர், ராவ் பஹதூர், ராவ் சாஹிப் பட்டங் கள் எல்லாம் கொடுப்பதில் பின்னணி இருந்தது. ஆங்கிலேயர்கள் நம்மைத் திறமையாக ஆள்வதற்கு, அடக்குவதற்கு லஞ்சம் பயன்பட்டது என்றும் சொல்லலாம். சிரஸ்தார், தாசில்தார் போன்றவர்களின் லஞ்சங்களை வெள்ளைக்காரன் பெரிதாக மதிக்கவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் 'சம்பளம் எவ்வளவு.. கிம்பளம் எவ்வளவு' என்பதுதான் அப்பவே பொது வழக்காக இருந்தது.

லஞ்சம் - தெலுங்கு வார்த்தை. லஞ்சலம் என்றால் விலைமகள். அதற்கும் இதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று யாராவது ஆராயலாம். தற்போது இருக்கிறது.

லஞ்சம் என்பதைத் தெளிவாக முதலில் அறுதியிடலாம். லஞ்சம் என்பது அதிகாரிகள் கடமையைச் செய்வதற்கோ, மீறுவதற்கோ கொடுக்கப்படும் பரிதானம். பரிதானம் என்றால் பண்டமாற்று. 'வந்த விவகாரத்தினில் இனிய பரிதானங்கள் வரும்' என்று குமரேச சதகத்தில் வருகிறது. மாறும் பண்டங்கள் ரூபாய் நோட்டுக் கட்டுகள், கடற்கரை வீடுகள், அயல்நாட்டு சமாசாரங்கள், பெண்கள்... எல்லாம் நாட்டின், இணைப் பொருளாதாரத்தின் அங்கங்கள்.

மேற்கண்ட வரையறையில் உள்ள இரண்டு வகைப்பட்ட லஞ்சத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடு - லஞ்சத் தொகை. பொதுவாக கடமையைச் செய்வதற்கு உண்டான லஞ்சத் தொகை, மீறுவதற்குள்ள லஞ்சத் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருக்கும். மேலும் கடமையைச் செய்பவர்களை அதட்ட முடியாது. மீறும் லஞ்ச அதிகாரிகளை நாம் அதட்டலாம். வீட்டுக்குகூட வரச் சொல்லலாம்; வருவார்கள்.

முதல் உதாரணத்தில் அரசாங்கத்துக்கு வரவேண்டிய பணம் ஏதும் மறுக்கப்படுவதில்லை. ஒரு என்ஓசி கொடுக்கவோ, ஒரு பர்த் சர்ட்டிபிகேட் கொடுக்கவோ, ஒரு பாஸ்போர்ட் எடுக்கவோ காத்திருக்க வேண்டிய அவகாசத்தைக் குறைக்க, நாம் கொடுக்கும் விலை. இல்லையேல் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அல்லது மற்`றாரு நாள் வரவேண்டும். அதற்கு ஆகும் செலவு நிச்சயம் லஞ்சத் தொகையைவிட அதிகமாக இருக்கும். இதனால் இது நியாயமானதாகப் படலாம்.

இதில் என்ன மறைமுகமான பாவச்செயல்? என்னவென்றால், உங்கள் அசௌகரியத்தைக் குறைக்க மற்`றாருவர் அசௌகரியத்தை அதிகப்படுத்துகிறீர்கள். உமக்கு முன்னே வந்து காலையிலிருந்து அல்லது ஒரு வாரமாக காத்திருக்கும் ஒரு லஞ்சம் தராத கிச்சாமியின் கேஸை முதலில் எடுத்துக் கொள்ளாமல் உங்களை முதலில் கவனிக்கச் சொல்கிறீர்கள். அந்த வகையில் இது ஒரு 'ஸாஷே' அளவு பாவம்தான். ரயில்வே புக்கிங் ஆபீஸில் நாற்பது பேர் க்யூவில் நின்றுகொண் டிருப்பார்கள். உள்ளே சிப்பந்தியைத் தெரிந்த ஒருவர் மட்டும் சுதந்திரமாக கௌண்ட்டர் அருகில் வந்து முழங்கையை வைத்து வேடிக்கை பார்த்தபின் கிளார்க்கை விசாரித்து பான்பராக் பரிமாறிக்கொண்டு தக்க சமயத்தில் ஒரு ரிசர்வேஷன் ஃபாரத்தை நீட்டுவார். இதை மற்ற பேர் பார்த்துக்கொண்டிருக்க, ஒரே ஒரு பி.பி-காரர் மட்டும் லேசாக எதிர்ப்பார். க்யூ ஜம்பிங், வரிசை தவறுதல் - இந்திய தேசிய குணம். சில வேளைகளில் மற்றவர் எதிர்ப்பார்கள். பல வேளைகளில், 'நமக்கேன் வம்பு' என்று விட்டுவிடுவார்கள். Apathy சின்னஞ்சிறு லஞ்சங்களின் முக்கிய காரணம்.

இரண்டாவது வகை லஞ்சத்தில் பாவ அளவு அதிகம். சர்க்காருக்கு கிடைக்கவேண்டிய பணம் ஒரு சர்க்கார் அதிகாரிக்குப் போகிறது. அது மக்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம். ரோடாகவோ, பஸ் நிலையமாகவோ, குடிநீர் திட்டமாகவோ அது மாறாமல், அதிகாரி ஒரு க்வார்ட்டர் அடிப்பதற்கோ, அவர் மகன் காப்பிட்டேஷனுக்கோ, மனைவி நகைக்கோ உதவுகிறது.

இவ்விரண்டு வகையில்தான் லஞ்சம் என்னும் துணைக்கண்ட இயந்திரம் இயங்குகிறது. கடமையைச் செய்ய வாங்கும் லஞ்சத்துக்குப் பல உதாரணங்கள் - பர்த் சர்ட்டிபிகேட், டெத் சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு போன்றவை. அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும் எந்தச் செயலும்.

கடமை மீறல் லஞ்ச உதாரணங்கள் - தரக்குறைவான பாலத்துக்கு இன்ஸ் பெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுப்பது அல்லது அண்டர் இன்வாய்ஸிங், டிஸ்கவுண்ட் பித்தலாட்டங்கள், செய்யாத வேலைகளைச் செய்துவிட்டதாக சொல்வது, பிளானை மீறிய கட்டடங்களை அனுமதிப்பது, வருமான வரியைக் குறைத்து மதிப்பிடுவது, சர்க்கார் நிலத்தையும் அஃதே, கஸ்டம் விதிகளைத் தளர்த்துவது, திருட்டு நகைகளை உருக்க அனுமதிப்பது. கடமை மீறலின் அளவுக்கு ஏற்ப லஞ்சத் தொகை குறைந்தபட்சம் ஆயிரத்திலிருந்து கோடிவரைகூட போகலாம்.

முதல் வகையான 'பெட்டி கரப்ஷன்' என்பதை ஒழிக்க மக்களுக்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். வேறு காரணங்களுக்காக ஆட்சேபணை தெரிவிக்க முடியாதபடி அரசுக் கட்டுப் பாடுகளையும் தேவைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதன் பின்னும் ஒரு சான்றிதழ் தர நான்கு வாரம் ஆகுமென்றால் நான்கு வாரம் காத்திருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் எழுதும் எல்லா கடிதங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். கடைசியில் அலுத்துப் போய் இந்த ஆளிடம் பேறாது என்று ஒழுங்காகச் செய்து கொடுத்து விடுவார்கள்.

மேலும், டெக்னாலஜியை வைத்துக் கொண்டு இந்த கரப்ஷனை ஒழிக்கலாம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் - ரயில்வே ரிசர்வேஷன். அது கணினியாக்கம் செய்யப்பட்ட பின் இந்த அடிமட்ட லஞ்சம் கணிசமாகக் குறைந்துவிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினிமயமாக்கமும் நல்ல உதாரணம். கடமையைச் செய்வதை கணிப்பொறியிடம் கொடுத்துவிட்டால், அந்த முட்டாள் இயந்திரத்துக்கு லஞ்சம் வாங்கத் தெரியாது.

அரசின் எல்லா செயல்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எல்லா அதிகாரிகளும், அணுக எளியவர்களாக இருக்க வேண்டும். 'ட்ரான்ஸ் பெரண்ட் கவர்ன் மெண்ட்' என்பார்களே, அது. எல்லா விண்ணப்ப ஃபாரங்களும் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

இரண்டாவது லஞ்சம்தான் நீக்குவது மிகமிக கடினம். இதில் டெக்னாலஜி ஏதும் செய்ய முடியாது. 'தெஹல்கா' போல லஞ்சத்தை அடையாளம் காட்டத்தான் டெக்னாலஜி பயன்படும். இதில் அதிகாரிகள் பலர் டெக்னாலஜிக்கு அப்பால் இயங்குபவர்கள். சர்க்காரின் விதிமுறைகளின் முரண்பாடுகள்தான் இவர்கள் ஆயுதம். இவைகளே இவர்களின் சரணாலயமும். இவர்களின் இந்தச் சங்கிலியில் எங்காவது ஒரு நாணயமான அதிகாரி - ஒரு இளம் கலெக்டரோ, ஜாயிண்ட் செக்ரெட்டரியோ இருப்பார். அவரிடம் எப்படியாவது உங்கள் கோரிக்கை சேரும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். நிபந்தனைகளை ஒரு அட்சரம்கூட மீறாமல் கடைப் பிடித்து, தகுதி அடிப்படையில் சர்க்காரை அணுகும்போது, சாதகமானது நடக்கவில்லை என்றால், தவறாமல் கோர்ட்டுக்குப் போக வேண்டும். டாஸ்டாயவ்ஸ்கியின் கதை போல, கடைசியில் நியாயம் கிடைக்கும். சிலவேளை மிகத் தாமதமாக - 91 வயதில்!

அரசியலில், பொது வாழ்வில் உள்ளவர்கள் சுத்தமாக இருந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள். முழுவதும் ஒழிக்க முடியும். அதற்கு நாம் தேர்ந்தெடுப்பவர்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் படித்திருக்க வேண்டும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களாக இருந்தாலும் நல்லது. பணத் தேவை இருக்காது.

இதைவிட்டால் ஆரம்பத்தில் சொன்னவாறு சோழ ராஜா காலத்து தண்டனை முறைதான் பயனளிக்கும். அதற்காக ஒவ்வொரு ஊரிலும் ஒரு யானை வாங்க வேண்டும்!

Tuesday, July 24, 2012

என் இனிய சென்னையே... எங்கே ஒளித்து வைத்திருந்தாய்? இவ்வளவு அழகிய பெண்களை?


என் இனிய சென்னையே... எங்கே ஒளித்து வைத்திருந்தாய்? இவ்வளவு அழகிய பெண்களை?



Monday, July 23, 2012

இசைஞானி அவர்களை சந்தித்த வேளையில்...




’சொல்’வெட்டு - 4

காற்று வீசினால்கூட கறைபட்டு விடுமோ எனும்படி பரிசுத்த வெள்ளை இல்லம். காத்திருந்தேன். ’அஞ்சே கால் அடி உயர பருத்தியாக’ ராஜா வர, பரவசத்தில் நெஞ்சே பதறியது. வணங்கி நின்றேன்...’பேட்டிக்காக வந்தேன்’ என்றேன்.

தோள்தட்டி மெல்லச் சிரித்தவர், ‘’எதுக்கு? பேசறதுக்குன்னே நிறையப் பேர் இருக்காங்க. நான் பேசறதுக்கு என்ன இருக்கு? யார் பேசுனாலும், எதைப் பேசினாலும் (இதயத்தைத் தொட்டுக்காட்டி) இங்கிருந்துதான் பேசணும். நான் பேசறதைத்தான் நீங்க கேக்கறீங்களே! இசைதான் என் மொழி. கேட்டதுமே உருக வைக்கிற இந்த பாஷையைத் தவிர, வேற பாஷை ஏதும் எனக்கு தெரியாதே!’’

- இசையால் நமக்கு உயிர் தரும் உயர்திரு. இசைஞானி அவர்களை சந்தித்த வேளையில்...

Saturday, July 21, 2012

எங்கள் வீட்டிலும் கூட....ஹார்லிக்ஸ் , காம்ப்ளான் டப்பாக்கள் உள்ளன.... ஒன்றில் உப்பு, இன்னொன்றில் ஊறுகாய்...





எங்கள் வீட்டிலும் கூட....ஹார்லிக்ஸ் , காம்ப்ளான் டப்பாக்கள் உள்ளன....
ஒன்றில் உப்பு, இன்னொன்றில் ஊறுகாய்...

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.




எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடது. எலி மிச்சம் வைத்ததாதல்தான் என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்ததோ என்னவோ.

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. இதில் சிட்ரிக் அமிலம் 5% உள்ளது.

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் பழம், காய், இலை என அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதில் செடி, கொடி என்று இரண்டு வகைகள் உண்டு. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது.

பசியைத் தூண்டி நா வறட்சியைப் போக்கும். இயற்கையாகக் கிடைக்கும் வைட்டமின் சி இதில் நிறைய உண்டு. அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் உண்டு. வெயில் காலங்களில் வெளியில் சென்று வந்த உடன் நிறைய பேருக்கு தலைவலி ஏற்படும்.
எலுமிச்சை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தலைவலி வரும் போது இந்தப் பவுடரை தண்ணீரில் கரைத்து வலி இருக்கும் இடங்களில் தடவி வந்தால் இந்த பசை குறையும் போது தலைவலி குறைந்து விடும்.
கோடைகாலத்தில் சிலருக்கும் வியர்க்குரு மற்றும் கட்டிகள் வரும். அதற்கு எலுமிச்சை மிகச் சிறந்த மருந்து. எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து தடவினால் வியர்க்குருவும், வேனல் கட்டியும் சரியாகும். வெயில் காலங்களில் அதிகளவு எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. உடல் வெப்பத்தை தணிப்பதற்கு பயன்படுகிறது.

“நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் – ஒரு சகாப்தம்




“நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் – ஒரு சகாப்தம்

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை:
------------------------------

'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை:
-----------------------------

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகளும் கௌரவங்களும்:
-------------------------------------------

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்

Thursday, July 19, 2012

செல்போனில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் பலர் இப்படி கடக்கும் போது உயிரை இழந்துள்ளனர்...




ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது, அதோடு மட்டுமில்லாமல் செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்கள் பலர் இப்படி கடக்கும் போது உயிரை இழந்துள்ளனர். இருப்பினும் பலர் செல்போன்கள் பேசியபடியே தண்டவாளத்தை கடக்கின்றனர்.

சென்னை புறநகர்பகுதிகளில் கடந்த ஆறரை மாதங்களில் மட்டும் ரயிலில் அடிபட்டு 220 பேர் இறந்துபோயுள்ளனர்..




அலட்சியம்...  அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை உயிர்...

Tuesday, July 17, 2012

How to Build Your Own Cheap, Simple Solar Oven?




How to Build Your Own Cheap, Simple Solar Oven.

The “Minimum” Solar Box Cooker is a simple box cooker that can be built in a few hours for very little money. When this cooker was designed, it was named it the “Minimum Solar Box Cooker” because, at the time, it represented the simplest design we could devise. What we didn’t communicate with that name was that this is a full-power cooker that works very well, and is in no way minimum as far as its cooking power goes.

What You Will Need

- Two cardboard boxes. We would suggest that you use an inner box that is at least 15 inch x 15 inch (38 cm x 38 cm), but bigger is better. The outer box should be larger than the small box all around, but it doesn’t matter how much bigger, as long as there is a half inch (1.5cm) or more of an airspace between the two boxes. The distance between the two boxes does not have to be equal all the way around. Also, keep in mind that it is very easy to adjust the size of a cardboard box by cutting and gluing it.

- One sheet of cardboard to make the lid. This piece must be approximately 2 to 3 inch (4 to 8 cm) larger all the way around than the top of the finished cooker (the outer box).

- One small roll of aluminum foil.

- One can of flat-black spray paint (look for the words “non-toxic when dry”) or one small jar of black tempera paint. Some people have reported making their own paint out of soot mixed with wheat paste.

- At least 8 ounces (250 g) of white glue or wheat paste.

- One Reynolds Oven Cooking Bag®. These are available in almost all supermarkets in the U.S. and they can be mail-ordered from Solar Cookers International. They are rated for 400 °F (204 °C) so they are perfect for solar cooking. They are not UV-resistant; thus they will become more brittle and opaque over time and may need to be replaced periodically. A sheet of glass can also be used, but this is more expensive and fragile, and doesn’t offer that much better cooking except on windy days.

Read More: http://wakeup-world.com/2011/07/06/how-to-build-your-own-cheap-simple-solar-oven/

Facebook is watching users’ chats for criminal activity





English Version Scroll Down...

ஃபேஸ்புக் என்ற சமூக வளைத்தளத்தை எவ்வளவு பேர் நல்லதுகு யூஸ் பண்ணீனாலும் சிலர் இதிலும் தன் கை வரிசையை காட்டுவது தான் வேதனை. அதற்க்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆம் ஃபேக் ஐடி சவடால்கள் மற்றூம் ஃபேக்கு போராளிகள் சிலரை இன்பாக்ஸில் வறுத்து எடுக்கும் அவலம் இனிமேல் பப்பு வேகாது.

ஃபேஸ்புக் இப்போது எல்லாரோட இன்பாக்ஸிலும் செக்யூரிட்டி செக் செய்யும் வகையில் மென்பொருளை நிறுவியுள்ளது. ஆம் செக்ஸ் டார்ச்சர், மிரட்டல், தீவராவத வார்த்தைகள் நீங்களோ அல்லது உங்களுக்கு யாரோ எச்சரிக்கை விடுத்தால் அடுத்த கணமே அந்த செக்யூரிட்டி சாஃப்ட்வேர் அலெர்ட் செய்யும். நீங்கள் எவ்வளவு பொருமைசாலியாக இருந்தாலும் இந்த தகவல் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்க்கு போகும்.

இதை ஃபேஸ்புக் அந்த அந்த நாட்டில் உள்ள சைபர் கிரைம் போலிஸ் டிப்பார்ட்மென்டுக்கு தகவலை அனுப்பும். இதை சீஃப் செக்யூரிட்டி ஆஃபிஸர் ஜோ சலீவன் ஃபேஸ்புக் தலைமை அலுவுகத்தில் இதை நிருபர்களிடம் பகிர்ந்து அளித்துள்ளார். செக்ஸ் அஃபன்டர்ஸ் லிஸ்டும் இனிமே ஃபேஸ்புக்கில் இருக்கும். அதனால் உங்களுக்கு ஆனந்த தொல்லை கொடுக்கும் ஆசாமிகளை சிக்க வைக்க நீங்கள் ஒரு ஒவ்வாத வார்த்தையை டைப் செய்தால் கூட அவர்களை சத்தமில்லாமல் சிக்க வைக்க கூடும். அது போக போலீஸ் ஃபாலோ ஆன் முறையில் குற்றவாளியை மொபைல் டிரேசிங் செய்ய முடியுமோ அது போல இங்கும் சத்தமில்லா புரட்சி நடத்தும் உங்களை போலீஸ் மோப்பம் பிடித்து கொண்டிருக்கிறது மாப்ஸ்களா.

Facebook is watching users’ chats for criminal activity and notifying police if any suspicious behavior is detected, according to a report. The screening process begins with scanning software that monitors chats for words or phrases that signal something might be amiss, such as an exchange of personal information or vulgar language. The software pays more attention to chats between users who don’t already have a well-established connection on the site and whose profile data indicate something may be wrong, such as a wide age gap. The scanning program is also “smart” — it’s taught to keep an eye out for certain phrases found in the previously obtained chat records from criminals including sexual predators.

If the scanning software flags a suspicious chat exchange, it notifies Facebook security employees, who can then determine if police should be notified. The new details about Facebook’s monitoring system came from an interview which the company’s Chief Security Officer Joe Sullivan gave to REPORTERS.
 

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!




தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை!

இனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

குடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!

வெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்'





ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief History of Time என்னும் பிரசித்தி பெற்ற நூலை எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று பேர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிகாகோ உலகத் தமிழ் அறக்கட்டளையினர் அண்மையில் வெளியிட்டிருக்கும் 'காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' நான்காவது என எண்ணுகிறேன். மொழிபெயர்த்தவர் நலங்கிள்ளி, பதிப்பாசிரியர் தியாகு.

இந்த நான்கையும் யாராவது ஒப்பிட்டுப் பார்க்கலாம். அறிவியலைத் தமிழில் எழுதுவதில் கொஞ்சம் மன்றாடியவன் என்கிற தகுதியில் இம்மாதிரியான நூல்களைத் தமிழில் தருவதில் உள்ள சிக்கல் களைக் கொஞ்சம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருபுறத்தில் 'தமிழில் எல்லாம் முடியும்... கலைச் சொற்கள் இல்லையெனில் கலைச் சொற்களை அவ்வப்போது ஆக்கிக்கொள்ளலாம்' என்று ஒரு கருத்து. மறுபுறத்தில் 'தமிழில் கலைச்சொற்கள் அமைக்கும் வரை காத்திருக்க வேண்டாம், அமைக்கவும் வேண்டாம்... சரளமாக ஆங்கிலத்தையும் தமிழையும் சரியான கலைச்சொற்கள் வரும் வரை கலந்தளிக்கலாம்'' என்னும் கருத்து. இந்த இரு துருவங்களுக்கும் இடையே ஒரு மொழிநடை வரவேண்டும். முதலில் இரண்டுக்கும் உதாரணம் தருகிறேன். சிகாகோவின் முயற்சி முதல் வகையைச் சார்ந்தது:-

'அண்டமானது மாவெடிப்பு இயன் வழிப்புள்ளியின் ஈறிலா அடர்த்தியுடன் தொடங்கிற்று. இயன்வழிப்புள்ளியில் பொதுச் சார்பியலும் மற்றெல்லா இயற்பியல் விதிகளும் செயலற்றுப் போகும். இயன்வழிப்புள்ளியிலிருந்து என்ன வரும் என்பதை ஊகிக்க முடியாது.'

இரண்டாவது வகை:-

'ஆர்டர் கமாண்டின் உதவியுடன் டேபிளின் அமைப்பில் மாற்றம் செய்யலாம். அதற்கு மூன்று வகையான கிளாஸ்கள் உள்ளன. புதிதாக ஒரு காலத்தைப் பதிவுசெய்யும்போது அது டேபிளின் கடைசி காலமாகத்தான் பதிவு செய்யப்படும். காலத்தின் இடத்தை நிர்ணயம் செய்ய முடியாது.'

இது 'தமிழ் இணையம்' பத்திரிகையில் வந்த கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. இவ்விரண் டில் முதல் உதாரண வாக்கியத்தை, ஒழுங்காக ஃபிசிக்ஸ் படித்த எனக்கே, புரிந்துகொள்ள அதன் தமிழை மறுபடி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டால்தான் முடிகிறது. ஆங்கிலமே தெரியாதவர்கள் தமிழில் மட்டும் படித்தால் இயன்வழிப்புள்ளி என்றாலும் singularity என்றாலும் இரண்டுமே புரியப் போவதில்லை. எனவே இந்த நூலின் முக்கிய குறிக்கோள் தமிழில் எழுதுவது சாத்தியம் என்பதை மட்டும் நிரூபிப்பது. அது படிப்பவர்களுக்குப் புரியும் என்பதை உத்தரவாதமாகச் சொல்ல முடியாது.

அதே போல் இரண்டாவது உதாரண வாக்கியம் கம்ப்யூட்டர் கற்பவர்கள் DDL என்னும் டேட்டா டெஃபனிஷன் லேங்வேஜைப் பற்றி அறிந்துகொள்ள ஓரளவுக்கு உதவும். ஆரம்பத்தில் இரண்டாம் வகைக் கட்டுரைகள் அதிகம் வரும். முதல் வகைக் கட்டுரைகளும் புத்தகங்களும் மெள்ளத்தான் வரும். தமிழிலேயே கலைச்சொற்களும் விளக் கங்களும் நிலைநாட்டப்பட்டு தமிழிலேயே படித்தாக வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்படும்போது, எல்லோரும் 'சிங்குலாரிட்டி'க்கு இயன்வழிப்புள்ளி என்கிற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, இம் மாதிரிப் புத்தகங்களுக்குத் தேவையும் பயனும் ஏற்படும். அதுவரை 'நேர்மங்களாலும் நொதுமங்களாலும் ஆன சின்னஞ்சிறு அணுக்கருவையும் அதைச் சுற்றிவரும் மின்மங்களையும் கொண்டமைந்த சாதாரணமான பருப்பொருளின் அடிப்படை அலகு' என்று அணுவைச் சொல்வதா அல்லது 'ப்ரோட்டான் களாலும் ந்யூட்ரான்களாலும் ஆன சின்னஞ்சிறு அணுக்கருவையும் அதைச் சுற்றிவரும் எலெக்ட்ரான் களாலும் கொண்டமைந்த (மேட்டர் என்னும்) பருப்பொருளின் அடிப்படைப் பிரிவு' என்று சொல்வதா என்கிற சர்ச்சை தொடரும். எப்படியும் சிகாகோவின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.

மாறாக, சில வாரங்களுக்கு முன் கிராம மாஜிஸ்திரேட் மேலிடத்துக்கு எழுதிய சென்ற நூற்றாண்டுக் கடிதத் தமிழின் உதாரணம் கொடுத்து இன்றைய நாட்களில் எப்படி எழுதுகிறார்கள் என்பதை யாராவது கிராமதிகாரி எழுதலாம் என்று சொன்னதற்கு பழநி மரிச்சிலம்பு கிராமத்தின் வி.ஏ.ஓ-வான என். சின்னச்சாமி இன்றைய ஜமாபந்தித் தமிழுக்கான உதாரணங்கள் கொடுத்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

'மாடாடுகள் மனுசாள் சௌக்கியம். நோய் நொடிகள் ஏதும் இல்லை. நஞ்சை பாழ், புஞ்சை புஜ்யம். நாட்டாமை மௌத்தி அடியேனும் தண்டனும் ஆஜர் சமூக சித்தம்.' இதை அவர் நகைச்சுவைக்காக கொடுத்திருந்தாலும் வட்டாட்சியருக்கு வி.ஏ.ஓ. எழுதும் கடிதங்களின் உதாரணங்கள் எளிய தெளிய தமிழில் இருந்தன. தமிழில் எல்லாம் முடியும் என்பது இங்குதான் தொடங்குகிறது.

Monday, July 16, 2012

புத்தமதத்தின் சிறந்த கதை...- இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை




 புத்தமதத்தின்  சிறந்த கதை...- இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

அது ஒரு கிராமம் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாட போகிறான். அப்போது என்னை காப்பாற்று! காப்பாற்று! என்று ஒரு அலறல் ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனை பார்த்து பரிதாபகமாக கத்துகிறது. உன்னை வலையில் இருந்துவிடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய் நான் மாட்டேன் என்று மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னை சத்யமாக சாபிடமாட்டேன் என்னை காப்பாற்று என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான், முதலை சிறுவனின் காலை பிடித்துக்கொண்டது. பாவி முதலையே இது நியாயமா?? சிறுவன் கண்ணீருடன் கேக்க.. அதற்கென்ன செய்வது? இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றி கூட கவலை இல்லை ஆனால் நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்ததைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

முதலையின் வாய்க்குள் மெல்ல போய்க்கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளை பார்த்து கேட்டான், முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கையா?? அதற்கு பறவைகள் எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம் ஆனால் அதை பாம்புகள் குடித்துவிட்டு சென்று விடுகின்றன. அதனால் சொல்கிறோம் முதலை சொல்வது சரிதான்..

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைய பார்த்து சிறுவன் அதே கேள்வியை கேக்கிறான்..
நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்கு துணிகளை சுமக்க வைத்து சக்கையாக பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி தளர்ந்துபோன போது எனக்கு தீனி போட முடியாது என்று சொல்லி துரத்திவிட்டான். முதலை சொல்வது தப்பே இல்லை. இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலை பார்த்து சிறுவன் இதே கேள்வியை கேட்கின்றான். இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல.. முதலைக்கு கோபம் வந்துவிட்டது. சிறுவனின் காலைக் கவ்விய படியே வாதாட தொடங்கிறது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே நீ பேசுவதால் நீ சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை என்றது முயல். முதலை சொன்னது நான் முட்டாள் இல்லை சிறுவனை விட்டால் அவன் ஓடிவிடுவான் என்று.. பெரிதாக சிரித்த முயல் புத்தியில்லா முதலையே! உன் வாலின் பலத்தை கூடவா நீ மறந்துவிட்டாய்?? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்தி பிடித்துவிட முடியுமே’ என்று நினைவுபடுத்த முதலையும் சிறுவனை விடுவித்து பேச தொடங்கிது. அப்போதுதான் முயல் சிறுவனை பார்த்து ‘’நிற்காதே! ஓடிவிடு! என்று கத்த சிறுவன் ஓடிவிடுகிறான். முதலை சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலைலயே சிக்கி இருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்க்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது அதன் நினைவுக்கு வந்தது! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோட தன்னை பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது புரிந்ததா இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்..! சிறிது நேரத்திதுக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிரமத்தினரை அழைத்துவர.. அவர்கள் முதலையை கொன்றுவிடுகிறார்கள்..அப்போது சிறுவனோடு வந்த புத்திசாலி நாய் முயலை துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்க்குள் கொன்றுவிடுகிறது.. சிறுவன் பெறுமூச்சு விடுகிறான்.. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்...

Wednesday, July 11, 2012

செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!





செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.

இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.

இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.


அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.

பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்
இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:

1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.

மசாலா தோசை....



மசாலா தோசை....



நம்மில் பலருக்கு பிடித்த உணவு மசாலா தோசை. அதை ஒருவர் தன் வாழ்நாளில் ருசித்தே ஆக வேண்டும் என்கிறது அமெரிக்கா. உலகின் 10 சிறந்த உணவுகளை அமெரிக்க பத்திரிகையான “ஹபிங்டன் போஸ்ட்” பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவுக்கு இடம் கிடைத்திருப்பது உணவு பிரியர்களுக்கு சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது.


பத்து உணவுகளை கொண்டுள்ள இந்த பட்டியலில் நமது தென்னிந்திய உணவான மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது.இந்த பட்டியலில் சீனாவின் பேகிங்டக், அமெரிக்காவின் பிபிஓ ரிப்ஸ், ஜப்பானின் டெப்பான்யாகி உள்ளிட்ட உணவுகளின் பட்டியலில் மசாலா தேசையும் தனக்கென ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளது. அந்த பத்திரிக்கையில் மசாலா தோசையை ருசித்து இப்படி வர்ணித்து எழுதி இருக்கிறார்கள்.

“ஒரு சாப்பாடு தட்டை நிரப்புகிற அளவில் மசாலா தோசை இருக்கும். அரிசி மாவும், உளுந்தமாவும் கலந்து தயாரிக்கும் தோசைக்கு உள்ளே நாக்குக்கு ருசியான மசாலா, தொட்டுக்கொள்ள பூண்டு சட்னி… அட… அருமை என்றால் அப்படியொரு அருமை” என மசாலா தோசை வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பிரான்சு, கிரேக்கம், இத்தாலி, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளின் உணவுகளும் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 உணவுகளையும் ஒருவர் தன் வாழ்நாளில் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, July 10, 2012

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இளையராஜாவின் பாடல் ஒலிக்கப் போவதாக தகவல்....





அடுத்த மாதம் லண்டன் மாநகரில் ஆரம்பிக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இளையராஜாவின் பாடல் ஒலிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. இங்கிலாந்தில் இருந்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. இதனால் இளையராஜாவின் பரம ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் தமிழிலேயே ஒளி, ஒலிபரப்பாகப் போவதுதான் விஷேசமான விஷயம். உலக அளவிலான கலாச்சாரங்களையும், கலைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அதில் மொத்தம் 86 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்றுதான் இளையராஜாவின் பாடல் என்று இங்கிலாந்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பாடல் எது என்று தெரியுமா…. 1981ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியாகி ஹிட் ஆன நான்தான் கொப்பண்டா, நல்லமுத்து பேரண்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வர்றேண்டா என்ற பாடல்தான் அது. கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் உருவான ராம் லட்சுமண் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

வாலியின் விறுவிறு வரிகளும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும், இளையராஜாவின் ரகளையான இசையும் இணைந்து இப்பாடலை ஹிட்டாக்கியிருந்தன. இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விறுவிறுப்பான பாடலாக ரசிக்கப்பட்டது. இப்போது ஒலிம்பிக் களத்தில், உலகப் புகழ் பெற்ற இசைப் பதிவுகளுக்கு மத்தியில் இளையராஜாவின் இந்தப் பாடல் இடம் பெறப் போவது குறிப்பிடத்தக்கது
 

Thursday, July 5, 2012

கடவுள் பொருள் - ஒரு ஆயவறிக்கை




கடவுள் பொருள் - ஒரு ஆயவறிக்கை

பலர் அட்லீஸ்ட் நூற்றுகணக்கானோர் இதை எனக்கு கேட்டு எழுதியிருந்தனர் இது என்ன ஒன்னும் புரிய மாட்டெங்குது என்று, நானும் பிசிக்ஸ் பிச்சிகிச்சி ரகம் தான் ஆனாலும் அறிவியல் மேல் கொண்ட காதலால் நன்கு புரிந்து எழுத ஒரு நாள் அவகாசம் தந்தமைக்கு நன்றி.

விஞ்சானிகள் உலகம் முழுவது அல்லும் பகலுமாய் ஒவ்வொரு துறையில் ஆய்வுகளை நடத்தி கொன்டுதான் இருக்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த "ஹிக்ஸ் பாஸன்" (Higgs Boson) எனும் இயற்பியல் பற்றிய ஆய்வு. ஆம் இதை சிம்பிளாக சொல்வதென்றால் உலகம் எப்படி உருவானது அந்த உருவான உலகத்தில் ஒரு பொருளுக்கு (உதாரணமாக அல்வா எப்படி ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொள்கிறது, கஞ்சி எப்படி கோர்வையாக இருக்கிறது) என்பதெல்லாம் விஞ்சானிகளை பொறுத்த வரை இது ஒரு அனுகூட்டு நடப்பு என்பதை நம்புகின்றனர். சின்ன வயதில் ஃபார்முலா படித்திருப்பீர்கள் (H2O ) என்றால் என்ன தண்ணீர் ஆனால் அதில் ஹைட்ரஜனும் ஒரு ஆக்சிஜன் ஆட்டமும் கலந்தது தான் தண்ணீர். அதனால் தான் தண்ணீரின் இயல்பு ஒத்து இருக்கும் தண்ணியை அளக்கலாம் ஆனால் எண்ண முடியாது இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வேதியல் கோட்பாடு இருக்கிறது இதற்க்கு காரணம் அனுகூட்டல், கழித்தல் தான். அனுவின்றி இந்த உலகம் அசையாது என்பது இன்று வரை ஆத்திகனும் நாத்திகனும் நம்பும் ஒரு வசனம்.

உலக விஞ்சானிகள் எல்லாம் சேந்து (CERN )செர்ன் எனப்படும் ஆய்வு கூட்டு தலைமையில் (Large Hadron Collider) லார்ஜ் ஹார்டன் கொல்லைடர் என்னும் ஒரு பெரிய 27 கிலோமீட்டர் சுற்று பாதையில் பிரஞ்சு நாடு மற்றூம் ஸ்விஸ் நாட்டின் எல்லையில் அதாவது பூமிக்கு அடியில் சுமார் 300 அடிக்கு கீழே இதை அமைத்தனர். இதை அமைக்க சுமார் பத்து ஆண்டுகள் ஆயின. 1998ல் ஆரம்பித்து 2008 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.இதை உருவாக்க நூறு நாடுகளில் இருந்து 10,000 விஞ்சானிகள் தேவைப்பட்டது. அது போக நூற்றுகணக்கான ஆய்வு கூடங்கள் மற்றூம் யூனிவர்ஸிட்டிகள் இதை முடிக்க கை கோர்த்தன. இதுவும் ஒரு வகை அனு உலை போல் ஆனால் இதில் புரோட்டான் நியூட்ரான் இல்லாமல் புரோட்டானை ஒரு புறம் ஃபையர் பண்ணிவிட்டு இன்னொரு புறம் இன்னொரு புரோட்டானை அனுப்பி இரண்டும் மோதிகொள்ள செய்து அதை பல ஹை ஸ்பீடு கேம்ராக்கள் சென்சார்கள் மற்றும் ப்ல கண்கானிப்பு கருவி மூலம் ஏதாவது ஒரு புதிய பொருள் கண்டுபிடிக்க முடிகிறதா என்பது தான் இந்த ஆய்வு. 10 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு இதை முதலில் ஃபையர் செய்தார்கள் ஆனால் 9 நாட்களில் மின்சார கசிவினால் மேக்னடிக் குவென்ச் ஆகி இந்த ஆய்வு தடைப்பட்டது அது போக நிரைய இடத்தில் சேதம் வேற, ஒரு வழியாக எல்லாம் சரி செய்யபட்டு 13 மாதங்கள் கழித்து 20 நவம்பர் 2009 ஆம் ஆண்டு திரும்பவும் இரண்டு புரோட்டான்களை எதிர் திசையில் ஃபையர் செய்யபட்டது. அப்படி எதிர் திசையில் நடந்த புரோட்டன் அணுவின் பயணம் மார்ச் 30 201ஒ ஆம் ஆண்டு எதிர்பார்த்த மாதிரி ரெண்டும் மோதிக்கொண்டு விஞ்சானிகள் எதிர்பார்த்த ரிஸல்ட் கிடைத்தது. இதன் வேல்யூ 3.5 டி ஈ வி பீம் (3.5 TeV beam) அதாவது மனித இனத்தில் மேனுவலாக உருவாக்கபட்ட ஹையெஸ்ட் அணு மோதல் இதுதான். இந்த ஆய்வு மேலும் தொடர்ச்சியாக நடத்தபட்டு 2012 ஆம் ஆண்டு வரை அதாவது போன வாரம் வரை செயல்பட்டு அதில் கிடைத்த இந்த அதிசிய பொருள் தான் காட் பார்டிக்கள். ஆம் இந்த சுற்றுபாதை திரும்பவும் மூடுவதற்க்கு 20 மாதங்கள் ஆகும். அப்படி மூடின பாதயை திரும்பவும் 2014 ஆம் மறு ஆய்வுக்கு பயண்படும்.

1960 ஆம் ஆண்டுகளின் பெல்ஜியமும், அமெரிக்காவும் இணந்து இந்த பூமி உருவான விஷயம் இந்த பொருளினால் தான் என்று ஒரு வேதியல் பொருளை கைகாட்டினர் பீட்டர் ஹிக்ஸ்(Peter Higgs), அதை பெருமளவில் கண்டுபிடித்த விஞ்சானி பெயர் கூட சூட்டினர்கள் அதுதான் "ஹிக்ஸ் பாஸம்" என்னும் ஒரு பொருள். இந்த ஆய்வில் நமது இந்தியர் முன்னாள் வங்காளி சுரேத்ரனாத் போஸ் கூட ஒரு தலைமை விஞ்சானி என்பதில் நமக்கு பெருமை. இந்த ஹிக்ஸ் பாஸம் தான் மாஸ் எனப்படும் ஒன்றை இந்த பூமியை உருவாக்கி கடல், வானம், பூமி இதெல்லாம் ஒன்றாக இருக்கும் மாஸ் விஷயத்தை ஆய்வில் கண்டுபிடித்தனர். இந்த மாஸ் தான் ஒன்ரை இன்னொறுடன் சேர்க்க வைக்கிறது என்று கண்டுபிடித்தனர். அதன் பின் இப்போது செய்யபட்ட ஆய்வில் இன்னுமொரு மாய பொருள் உள்ளதை கண்டுபிடித்திருக்கின்றனர் செர்ன் மற்றும் இன்னுமொரு ஆய்வு கூட்டம் இரண்டு சேர்ந்து நேற்று கூட்டறிக்கையில் ஆம் உலகத்தில் இன்ன்மொரு மாய சக்தி ஒன்றை இரண்டு புரோட்டான் அணுவின் மோதலால் கண்டுபிடித்தோம் இதற்க்கு சிலர் கடவுளின் பொருள் (God's Particle) என கூறினாலும் இது இயற்பியல் தான் உறுதிபடுத்தியுள்ளனர் என ஒரு சேர கூறினர். இதை விஞ்சானிகள் பெரிய சந்தோஷத்துடன் கூறிய காரணம் உலகத்தில் இதை வைத்து இன்னும் பெருமளவில் கேன்சருக்கு மருந்து, புது வகை எனர்ஜி, புது வகை மின்சாரம், புரோட்டான் தெரபி, சூரிய மின்சாரம் மாற்று வழிகள்,கிளவுட் கம்ப்யூட்டிங் அட்வான்ஸ் மெத்தட் போன்ற விஷயங்களுக்கு இந்த ஆய்வு பயன்படும் என்று தெரிவித்து இருந்தனர். அடுத்து என்ன இதுவரை இந்த பூமிபந்து உருவான காரணம் வெறும் 4% சதவிகித உண்மையே ஆய்வில் கண்டுபிடித்திருந்தனர். இதன் மூலம் மீதம் உள்ள 96% சதவிகித காஸ்மோ ரகசியங்கள் வெளிவரும் என விஞ்சானிகள் நம்புகின்றனர். இந்த் ஆய்வுக்கு இது வரை 1000 கோடி டாலர்கள் செலவாகியுள்ளது என்பது கூடுதல் தகவல். 

Wednesday, July 4, 2012

EVERY ONE OF US WILL HAVE TO BECOME A PROPHET, AND YOU ARE THAT ALREADY. ONLY KNOW IT - Swamy Vivekananda




EVERY ONE OF US WILL HAVE TO BECOME A PROPHET, AND YOU ARE THAT ALREADY. ONLY KNOW IT - Swamy Vivekananda

How do you know that a book teaches truth? Because you are truth and feel it. That is what the Vedanta says. What is the proof of the Christs and Buddhas of the world? That you and I feel like them. That is how you and I understand that they were true. Our prophet-soul is the proof of their prophet-soul. Your godhead is the proof of God Himself. If you are not a prophet, there never has been anything true of God. If you are not God, there never was any God, and never will be. This, says the Vedanta, is the ideal to follow. Every one of us will have to become a prophet, and you are that already. Only know it.

- Swami Vivekanananda
The Complete Works of Swami Vivekananda/Volume 2/Practical Vedanta and other lectures/Practical Vedanta: Part 1

Sunday, July 1, 2012

வெற்றிலையின் மருத்துவ குணங்கள்..!






வெற்றிலையின் மருத்துவ குணங்கள்..!

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.
இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

Female Genocide in India and the 50 Million Missing in India...




Female Genocide in India and the 50 Million Missing in India.


Even before I had initiated 'The 50 Million Missing Campaign' in December 2006,[1] it was clear that one of the toughest challenges for the campaign would be to overcome public scepticism both within and outside India, about the veracity of its claim. How could fifty million plus women just disappear from a country in a period that spans less than a century?[2] That number is about the size of the entire populations of Sweden, Austria, Switzerland, Belgium and Portugal put together.

Figure 1. The 50 Million Missing campaign poster. Designed collaboratively by designer, Pam Kelso, Fernando G. Aguinaco (background photo), and Hervé Blandin (foreground photo).

So, in January 2008, while, in my capacity as founder of the 50 Million Missing Campaign, I was addressing a local chapter of the Rotary International in Kolkata as an invited guest speaker, I began by dispelling the first myth. 'Missing' is actually a euphemism, I confirmed. These are not 'missing persons' cases. Here the term in fact means—eliminated. However, 'missing' has stuck ever since the Noble Laureate, Dr. Amartya Sen, first used the term in 1986 to draw attention to the vast divergence in India's natural gender ratio.[3] Where the average male to female ratio in most human populations is about 100:105, Sen, using extrapolations from the census data, estimated that India was 'missing' about 37 million women—women who should have been in the population but could not be accounted for. Sen's warning rang no bells for the Indian administration, and the gender downslide continued. By 2005, almost twenty years since Sen's first alert, the International Herald Tribune reported that 50 million women were 'missing' from India's population.[4]

The public reservation, however, is with the actual likelihood of such a mass-scale elimination occurring. Occasionally one reads in Indian papers about baby body parts being found in a well in the compound of some clinic, or a young woman dying of burns under suspicious circumstances due to a supposed kitchen accident, but there is nothing in the news that suggests a blood-bath on the scale of a genocide. To drive home the point to my Rotary audience, I put up on the overhead a two columned table relating to the annual rates of female homicide in India. This slide included the means of elimination, and the estimate for the annual rate for each category.

Table 1. Annual Rates of Female Homicide in India

Female foeticide approximately 1 million[5]
Female infanticide approximately 25000 in the State of Kerala alone[6]
Dowry-related murders approximately 25000[7]
Preadolescent mortality 1 in 6 dies before 15 yrs (CRY)[8]
Mortality rate 40% higher for girls under 5 than boys the same age (UNICEF)[9]
Maternal mortality rate (MMR) 136,000
(1 woman dies every 5 minutes due to pregnancy-related causes) (WHO)[10]

The number one means of elimination I pointed out, is female foetal abortions. An estimated 1 million female foetuses are selectively eliminated in India each year, and that number is expected to rise to 2.5 million within the next few years.[11] Method number two is female infanticide, a practice that has a long history in India. So far there has been no national average estimated for female infanticide, largely because it is difficult to track down with there being no administrative compulsion for citizens to register births. Nevertheless, existent data gives an indication of the scale of the practice. In the state of Kerala, one of India's most progressive states, with a literacy rate of over 90 per cent, it is estimated that about 25,000 new born girls are killed every year.[12] In other states like Bihar, where the issue of gender bias is plainly discernable, one survey reveals that mid-wives interviewed admitted to being paid to kill almost 50 per cent of the baby girls they delivered.[13] As the number three method of elimination I listed dowry murders, also known as 'dowry deaths.' Despite the fact that a majority of dowry-related homicides of young married women in India are never even filed with the police, in the late 1990s it was estimated that at least 25,000 young married women were cold-bloodedly murdered by their husbands and in-laws in dowry extortion cases.[14] That number has continued to rise, as the practice of dowry itself spreads to communities, like tribal groups, that traditionally never had the custom of dowry.

Yet another means of elimination of females in India is the abnormally high mortality rate for girls under 5 years. In 2007, UNICEF reported that the mortality rate for girls under five was 40 per cent higher than for boys of the same age.[15] Most of these girls are dying of nutritional and medical neglect. The neglect is often deliberate, for parents are not only biased in how they distribute food among their sons and daughters, but often they do not want to pay for a sick daughter's medical treatment—cases that would in most countries amount to negligent homicide.

And the fifth means of female elimination in India is maternal mortality. In 2007, India accounted for the highest maternal mortality rate in the world—with one woman dying of pregnancy-related causes every five minutes.[16] The reasons cited for this are inadequate medical care and early-aged pregnancies in girls due to child marriages. Generally in cases of child marriages both the bride and groom are children. But the issue is really with the girls because the health impact is on them. Their bodies are underdeveloped and they are too young to bear children—which results in complications and deaths during childbirth, but with serial pregnancies from a very young age there is a complete breakdown in the health of these girls by the time they enter adulthood.

While ultrasound facilities are sprouting around every street corner in India and reaching remote villages in mobile vans at competitively affordable pricing, people still opt for the cheapest abortion facility available to cut back on the cost of operation and hospitalisation. In a culture, where women have practically no say or control over their own reproductive processes, and essentially serve as wombs for patriarchy's narcissistic desire for an endless lineup of sons, India's deplorable maternal mortality rate is a certified killing machine. Looking at all this data through a comprehensive table, I pointed out to my Rotary audience, that the numbers for the death rates of females in India, tot up very rapidly, and it becomes quite evident how India today is liable for one of the worst genocides in human history. The 1948 charter for the United Nations Convention on Genocide states that genocide entails the prevention of birth of a group, its selective killing, or causing it grave physical or mental harm.[18]

If the Indian public is currently perplexed about the issues of female genocide in its country, it is that much more confounded about its possible cause. In a recent survey that the 50 Million Missing Campaign distributed, most respondents felt that poverty and illiteracy were the major contributing factors to female genocide. The assumption therein is that if India's massively impoverished and illiterate masses were to receive a decent education and a reasonable level of income, the nation will pull itself out of this social quagmire. However, the ground realities speak otherwise. Surveys show that some of the highest rates of female foeticide occur among the comfortable middle and upper classes, who not only have the means to access adequate medical facilities, but who show an equal prevalence towards the practice of dowry and dowry-related murders.[19] There is no obvious correlation to indicate that the poor and illiterate in anyway contribute more towards female genocide in India than do the wealthy and educated. So what could be driving this systematic female annhiliation?

To answer that question I put up my final slide for my Rotary audience. It was titled 'The Acculturation
Figure 2. The Acculturation of Female Homicide of Female Homicide,' and listed the following terms: sati, bride-burning, dowry-death, doodh-peeti, kuri-mar, and johar. Each of these terms I explained, was a method of female homicide that was widely practised, widely accepted, and culturally-specific to India. Though sati, the practice of the burning alive of a widow on her husband's pyre, was banned by the colonial British administration in 1829, since India's independence in 1947, there have been at least forty reported cases.[20] The public still flocks to temples built to deify the practice of sati, and the government of India dare not take these monuments down.

In two of India's most sacred towns, Benaras and Vrindavan, thousands of widows who have been driven out of their homes or some who have escaped sati, eke out a living by begging on the streets or prostituting themselves.[21] Doodh-peeti, another old tradition still practiced in the north-west, is a method of killing new born girls by drowning them in buckets of milk. Kuri-mar is a reference to the communities in northern India that traditionally killed all their daughters. The Kuri mar or 'daughter killer' communities at one time openly bragged about having 'no daughters' —only sons. Most new-born girls would be buried underground in earthen pots. It is said, that Sita, the heroine of India's 2000-year-old epic saga, who was found in a pot underground by her adopted father while he was ploughing the field, was perhaps one of the earliest girls thus rescued. Johar is the practice that socially compelled women to commit individual or mass suicide, when they were attacked and raped by rival communities, in order to preserve their family's honour. When a practice acquires a name in a society, it becomes acceptable at the subconscious level of that community's collective thinking. Its premise becomes sacrosanct, and the lines between crime and culture, and what is permissible and reprehensible, become blurred. It is this deep, historically-rooted acculturation of female homicide that is sustaining female genocide in India.

Evidence of this is found in the average Indian's response to most of the crimes mentioned above. Where the murder of a new born by her own parents, or the gang lynching of a young married woman by her husband and in-laws would send shock waves through most communities, in India it hardly evokes a response. If pressed for one, the response is most likely to be a bland, nonchalant acknowledgement that such things do happen here.

Another ascertainment of the invidiousness of this acculturation is evidenced in the appalling gender ratio of expatriate Indian communities in the U.S., U.K., and Canada. Despite being wealthy, well-educated, and socially well placed, expatriate Indian communities have engaged in female foetal abortions to such an extent, that there is now a conspicuous skewing of the gender ratio in these communities, so much so that governments and International bodies are beginning to take note. In 2006, in a speech at the United Nations General Assembly, it was announced by Nicholas Eberstadt that the unequal gender ratio achieved in some of these communities was 'biologically impossible.'[22] In the United Kingdom the medical community is now refusing to support this practice. However, that does not appear to deter expatriate Indians, who simply fly into India for their abortions.[23]

India today has laws to counter female foeticide, dowry, and dowry 'deaths.' However, the misogyny that promotes the objectification of women, treating them like usable and disposable objects, has such deeply pervasive cultural and historical roots, that it sometimes seems impossible to surmount. It permeates every corner of society. Laws pertaining to prenatal diagnosis of gender are widely flouted. Thousands of doctors, ultrasound and abortion clinics routinely cater to the female killing fields.[24] Police and courts are corruption-riddled and bureaucratic— so much so that most cases that may be dowry-related homicides go unregistered and uninvestigated, and are passed off as 'suicides' or 'accidents.' In the state of Kerala, police assigned to keep tabs on the safety and upbringing of girls delivered in hospitals, regard it as an opportunity for some extra income, and extract bribe money from parents who have killed their infant daughters.[25]

Perhaps the real danger is the rank apathy of the Indian nation to its own predicament. India is not even attempting to pull itself out of this horrendously annihilating abyss. In 2008, the U.N. announced, the number of 'missing' women in India had climbed to 62 million.[26] What this means in terms of India's social reality is that there are at least 62 million males without hope of ever finding female partners from within their own cultural setting. The possibility of social mayhem under such conditions is terrifying — and what it would involve could lead to widespread sexual crimes, perversion, and near anarchical law-and-order situations. Already, there is massive trafficking of girls across state boundaries in India, to be sold as 'brides' in those regions where the gender ratio has dropped so low that men cannot find women to marry. Families with many sons, who cannot afford to 'buy' a bride for each, often will buy a 'bride' for all the men to share.[27] Where every other social crisis that India currently faces—poverty, the nuclear standoff, the HIV/AIDs epidemic, and population explosion—could, under the most optimistic situations be somewhat dealt with, there is no solution to India's gender-ratio skewing. The warping of the natural gender ratio is irreversible.

Nonetheless, the signal is clear. India must pull out all its emergency stops to deal with this gender crisis right away. To get the ball rolling, I turned to the Rotary audience I was addressing and pleaded:

The change begins with us. Each one of us. It begins with how we respond to this issue. The first thing we need to do is to abnormalise what our history has normalised for us. We must refuse to allow this normalcy. So the next time you hear of a case of female infanticide, or foeticide, or dowry murder—please speak up. Speak loud. Rant, rave, protest, resist, but do not say—'this happens,' and look away.

It was a desperate plea I made to an audience that I believed were of the socially conscionable stratum of society, and that if we wanted the 50 Million Missing Campaign to stir the public this is where it would happen. But nothing could have prepared me for the audience's response that evening. A veteran Rotarian on the dais declared, in blistering, bitter tones, that my speech was 'perverse,' and it would be better, should I ever be invited back there, to come prepared with a happier, more optimistic message. He urged his fellow Rotarians to not applaud my speech. The audience coldly complied, till the embarrassed President of the club coaxed them into a mild, half-hearted applause. Over the next few days I mused over the Rotarians' response to my speech and tried to make sense of it. If this was the response from India's so called educated, civic-minded groups, what were we to expect from the general public? And why would this speech infuriate them so? It dawned on me slowly, that the audience was the public—the participatory public. Police, government administrators, doctors, wealthy, educated upper and middle class businessmen. The response was offensive, perhaps defensive, because a light had been flashed into their collective consciousness. And at that moment, they had no place to hide. It then dawned on me that that response is perhaps exactly what the campaign needs to evoke to jolt India out of its genocidal apathy.