Total Pageviews

Tuesday, June 28, 2011

திருக்குறள் - 50


திருக்குறள் - 50
வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் உள்ள தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படுவான்.

Thursday, June 23, 2011

திருக்குறள் - 49


திருக்குறள் - 49
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
பொருள்: இல்வாழ்க்கை அறன் எனப் படும். பழிப்புக்கு இடம் இல்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

Tuesday, June 21, 2011

திருக்குறள் - 48


திருக்குறள் - 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள்: தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பை விடப் பெருமை உடையதாகும். 

Friday, June 17, 2011

திருக்குறள் - 47


திருக்குறள்  - 47
 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
பொருள்: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராக திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

Wednesday, June 15, 2011

திருக்குறள் - 46




திருக்குறள் - 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போய்ப் பெறுவ தெவன்.
பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் பெற்றிட இயலுமா?  இயலாது.

Friday, June 10, 2011

திருக்குறள் - 45


திருக்குறள் - 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருள்: இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

Wednesday, June 8, 2011

திருக்குறள் - 44


திருக்குறள் - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் என்னான்றும் இல்.
பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

திருக்குறள் - 44

திருக்குறள் - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் என்னான்றும் இல்.
பொருள்: பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

Monday, June 6, 2011

திருக்குறள் - 43


திருக்குறள் - 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
பொருள்: வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல், ஆகிய கடமைகளை நிறைவேற்ற தன்னை நிலைபடுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுகுரியனவாகும்.