Total Pageviews

Sunday, October 9, 2016

மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்து, மரமாக எழு.





குறிக்கோள் இல்லாத வாழ்க்கை,
முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது.
அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
-----------------------------------------------------------------------------------
மண்ணில் விழுவது தப்பில்லை,
ஆனால் விதையாக விழுந்து,
மரமாக எழு.

http://sugavanam-tamil-readings.blogspot.in/2016/10/blog-post.html
-----------------------------------------------------------------------------------
வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்.
வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்...
-----------------------------------------------------------------------------------
மாலையில் மரணமென்று தெரிந்தும்
காலையில் அழுவதில்லை மலர்கள்.
நீ மட்டும் சோகங்களை நினைத்து
வாடுவதா அழகு?
-----------------------------------------------------------------------------------
நான் அமைதியை விரும்புகிறேன்.
இதில்
நான் - அகந்தை
விரும்புதல் - ஆசை
இரண்டையும் விட்டொழி.
-----------------------------------------------------------------------------------
மீதமிருப்பது “அமைதி” - அது உனக்கே.
எப்போதும் அடக்கமாயிரு,
எல்லாமிருந்தும் அமைதியாக
இருக்கும் நூலகம் போல.
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்.
-----------------------------------------------------------------------------------
லட்சியமும் அதற்கான வழிமுறைவகுப்பதும், சாலை வரைபடம் போல.
சாலை வரைபடம் உங்கள் பயணம் சுலபமான, இனிமையானதாக இருக்க உதவாது.
ஆனால் அது உங்களது பயணத்தின் சரியான பாதையாக இருக்கும்.
போராடினால் இறுதியில் வெற்றியே கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------
நண்பனையும் நேசி,
எதிரியையும் நேசி.
உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
உன் வெற்றிக்கு காரணமானவன் - உன் எதிரி..
-----------------------------------------------------------------------------------
உங்கள் ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது.
ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது.
-----------------------------------------------------------------------------------
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான்.
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். - இதில் நீ யார்?
-----------------------------------------------------------------------------------
பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே.
எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!
-----------------------------------------------------------------------------------
தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்.
அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
-----------------------------------------------------------------------------------
நீ மேலே உயரும்போது
நீ யாரென்று நண்பர்கள் அறிவார்கள்.
-----------------------------------------------------------------------------------
ஆனால் நீ கீழே போகும்போது
உண்மையான நண்பர்களை நீ அறிவாய்...
-----------------------------------------------------------------------------------
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது
ஊமையாய் இரு.
-----------------------------------------------------------------------------------
புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு.
எளிதில் வெற்றி பெறலாம்.
-----------------------------------------------------------------------------------
இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும்.
இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென.
உனக்கும் தெரியுமா? முயன்று பார், முடியாது எதுவுமில்லை.
-----------------------------------------------------------------------------------
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
அது கற்று தந்த பாடத்தை மறந்துவிடாதே!
-----------------------------------------------------------------------------------
உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான்.
புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்...
-----------------------------------------------------------------------------------
காசுதான் சத்தம் போடும்,
பணம்(நோட்டு) அமைதியாகவே இருக்கும்.
நீயும் உன் மதிப்பை உயர்த்திக்கொள்.
---------------------

Sunday, May 29, 2016

Jawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்


Jawaharlal Nehru - இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார்

http://sugavanam-tamil-readings.blogspot.in/2016/05/jawaharlal-nehru.html

https://en.wikipedia.org/wiki/Jawaharlal_Nehru

இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந்திருக்கிறார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் சுதந்திரம் கிடைத்தவுடன் உருவான டஜன் கணக்கான பிரச்சனைகளை திறமையாகவும் நேர்மையாகவும் கையாண்டு இருக்கிறார். பிடிவாதமாக இந்தியாவை ஜனநாயக நாடாக அறிவித்து தன்னையும் காந்தியையும் தீவிரமாக எதிர்த்த அம்பேத்காரையே சட்ட அமைச்சராக நியமித்து அரசியல் சாசனம் எழுதப் பணித்திருக்கிறார். இன்றளவும் உலகமே போற்றும் ஜனநாயகத் தூண்களை பெரும் அக்கறை, பொறுமையோடு நிறுவி இருக்கிறார். பெண்கள் மற்றும் ஒடுக்கப் பட்ட இனத்தவருக்கு சட்ட ரீதியாக பெரும் மாற்றங்கள் கொண்டு வர உழைத்திருக்கிறார். இந்தியாவை ஒருங்கிணைக்க பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஏழ்மை மிகுந்திருந்த, படிப்பறிவற்ற ஒரு தேசத்தை நவீன உலகுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்களிப்பு அவருடையது.

காஷ்மீர், சீனா மாதிரி பல்வேறு பிரச்சனைகள் அவரால் தீர்க்க முடியவில்லை. அதை வைத்துதான் அவரை வலதுசாரிகள் தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அறுபது ஆண்டுகள் ஆகியும் அந்தப் பிரச்சனைகள் தீரவில்லை என்பதே அவை எவ்வளவு சிக்கல் நிறைந்தவை என்பது தெரியும். தவிர காஷ்மீர் மற்றும் சீனா இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க அவருக்குப் பின் எந்தப் பிரதமரும் அவர் அளவுக்கு முயற்சி செய்யவில்லை.

இதை எல்லாம் தாண்டி திறமையான எழுத்தாளர், வரலாற்று அறிஞர், பேச்சாளர். பெரும் படிப்பார்வம் கொண்டவர். இலக்கியம், இசை, மது, மாது, தம்மு விஷயங்களில் ரசனைக்கார ஆசாமி.

நேருவுக்குப் பின் அவரின் திறமை/நேர்மையில் பாதி அளவு கூட கொண்ட ஒரு பிரதமரை இந்தியா இன்னமும் பார்க்கவில்லை.


நேருவைப் பற்றி அதிகம் படித்ததில்லை.

 நிறைய படிக்கணும்.