Total Pageviews

Monday, July 16, 2012

புத்தமதத்தின் சிறந்த கதை...- இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை




 புத்தமதத்தின்  சிறந்த கதை...- இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

அது ஒரு கிராமம் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாட போகிறான். அப்போது என்னை காப்பாற்று! காப்பாற்று! என்று ஒரு அலறல் ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனை பார்த்து பரிதாபகமாக கத்துகிறது. உன்னை வலையில் இருந்துவிடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய் நான் மாட்டேன் என்று மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை நான் உன்னை சத்யமாக சாபிடமாட்டேன் என்னை காப்பாற்று என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான், முதலை சிறுவனின் காலை பிடித்துக்கொண்டது. பாவி முதலையே இது நியாயமா?? சிறுவன் கண்ணீருடன் கேக்க.. அதற்கென்ன செய்வது? இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றி கூட கவலை இல்லை ஆனால் நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்ததைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

முதலையின் வாய்க்குள் மெல்ல போய்க்கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளை பார்த்து கேட்டான், முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கையா?? அதற்கு பறவைகள் எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம் ஆனால் அதை பாம்புகள் குடித்துவிட்டு சென்று விடுகின்றன. அதனால் சொல்கிறோம் முதலை சொல்வது சரிதான்..

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைய பார்த்து சிறுவன் அதே கேள்வியை கேக்கிறான்..
நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்கு துணிகளை சுமக்க வைத்து சக்கையாக பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி தளர்ந்துபோன போது எனக்கு தீனி போட முடியாது என்று சொல்லி துரத்திவிட்டான். முதலை சொல்வது தப்பே இல்லை. இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலை பார்த்து சிறுவன் இதே கேள்வியை கேட்கின்றான். இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல.. முதலைக்கு கோபம் வந்துவிட்டது. சிறுவனின் காலைக் கவ்விய படியே வாதாட தொடங்கிறது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே நீ பேசுவதால் நீ சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை என்றது முயல். முதலை சொன்னது நான் முட்டாள் இல்லை சிறுவனை விட்டால் அவன் ஓடிவிடுவான் என்று.. பெரிதாக சிரித்த முயல் புத்தியில்லா முதலையே! உன் வாலின் பலத்தை கூடவா நீ மறந்துவிட்டாய்?? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்தி பிடித்துவிட முடியுமே’ என்று நினைவுபடுத்த முதலையும் சிறுவனை விடுவித்து பேச தொடங்கிது. அப்போதுதான் முயல் சிறுவனை பார்த்து ‘’நிற்காதே! ஓடிவிடு! என்று கத்த சிறுவன் ஓடிவிடுகிறான். முதலை சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலைலயே சிக்கி இருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்க்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது அதன் நினைவுக்கு வந்தது! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோட தன்னை பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது புரிந்ததா இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்..! சிறிது நேரத்திதுக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிரமத்தினரை அழைத்துவர.. அவர்கள் முதலையை கொன்றுவிடுகிறார்கள்..அப்போது சிறுவனோடு வந்த புத்திசாலி நாய் முயலை துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்க்குள் கொன்றுவிடுகிறது.. சிறுவன் பெறுமூச்சு விடுகிறான்.. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்...

No comments:

Post a Comment