Total Pageviews

Saturday, June 16, 2012

காணாமல் போனவைகள் - பல்லாங்குழி




காணாமல் போனவைகள் - பல்லாங்குழி:
-----------------------------------------------------------

14 குழிகள் அமைந்த அந்தகால இண்டோர் கேம்.சோழிகளை போட்டு விளையாடுவார்கள்.

பெரும்பாலும் பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அதிக நேரம் பல்லாங்குழி விளையாடுவார்கள். பெண் வீட்டுச் சீதனங்களிலும் பல்லாங்குழி கட்டாயம் இடம் பெறும்.

பெரும்பாலும் ஆண்கள் பல்லாங்குழி விளையாடுவதை ஏதொ கூச்சத்திற்குரிய விடயமாகவே பார்த்து வருகின்றனர். இது பெண்களுக்கான விளையாட்டாகவே கருதுகின்றனர்.

புதியதாக திருமணம் ஆனவுடன் மணமகள் மற்றும் மணமகள் இருவரும் கட்டாயமாக பல்லாங்குழி விளையாட வேண்டிய சம்பிரதாயம் இன்னும் ராமேஸ்வரம் தீவில் இருக்கின்றது.

ராமேஸ்வர பூர்வீக வீட்டின் முற்றத்தில் தரையில் பல்லாங்குழி விளையாடுவதற்கான வட்டப் பள்ளங்களை வெட்டி வைத்திருந்தார்கள். இன்று முற்றங்களும் கண்ணில் படுவது இல்லை பல்லாங்குழியும் அருங்காட்சியகப் பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சிகளிலும் பல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment