Total Pageviews

Wednesday, June 13, 2012

என் கைகளை வெட்டினார்கள்,,,




சிறு விதையில் நான் ,
மறைந்து முட்டினேன்,
பூமி வழி விட்டது,
மழை நீரில் வளர்ந்தேன்,
சூரியனை பார்த்து வளர்ந்தேன்,
வளர்ந்தேன், வளர்ந்தேன்,
கனி கொடுக்கும் அளவிற்கு
பல வருடமாக வளர்ந்தேன்,
சாலை ஓரமாம், சாலை
விரிவாக்கமாம், என் கைகளை
வெட்டினார்கள், உங்களை மாதிரி
அழ தெரியவில்லை, ஒன்றும்
மட்டும் புரிந்தது, எவ்வளவு தான்
உங்களுக்கு உழைத்தாலும் உங்க
மனித புத்திய காட்டிடுவீங்க,
என் கடைசி உயிர் மூச்சும்
உங்களுக்காவே.
 

No comments:

Post a Comment